Sunday 19th of May 2024 10:58:02 AM GMT

LANGUAGE - TAMIL
.
சற்று முன்னதாக மூன்று மாவட்டங்களில் மேலும் 12 GS பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

சற்று முன்னதாக மூன்று மாவட்டங்களில் மேலும் 12 GS பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!


அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து மூன்று மாவட்டங்களில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் சற்று முன்னதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட எல்தெனிய கிழக்கு, சூரியபாலவ தெற்கு மற்றும் வடக்கு, கீழ் கரகஹாமுல்ல வடக்கு, மேல் கரஹாமுல்ல வடக்கு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட கல்பொத்த, கெஸ்பெவ கிழக்கு, மாகந்தன மேற்கு, குந்தன, பொல்ஹேன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட திம்புர கிராம சேவகர் பிரிவும், மத்துகம காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட யடியன மேற்கு கிராம சேவகர் பிரிவும் இன்று காலை 6 மணியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், களுத்துறை மாவட்டத்தின் பதுரலிய - இங்குருதலுவ, காவல்துறை அதிகார பிரிவும், மீகஹாதென்ன காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட பெலவத்தை கிழக்கு, மிரிஸ்வத்தை மற்றும் கீழ் ஹேவஸ்ஸ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE